மதுரை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
மதுரை மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யுபிஐ பயன்படுத்துறீங்களா? அக்.1க்கு பிறகு இந்த வசதி இருக்காது: வெளியான தகவல்
இந்தியர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள்.
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த வார விசேஷங்கள்: 19-8-2025 முதல் 25-8-2025 வரை
19-ந் தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரத உற்சவம்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.
* மிலட்டூர். தேவகோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.
* மேல்நோக்கு நாள்.
''துரந்தர்'' படம்...மருத்துவமனையில் 100 பேர் அனுமதி
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது லடாக்கில் தனது 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், படக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார். இதையடுத்து விநாயகர். அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ரஷியா செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷியா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷியா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வடமேற்கு மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்தது.
இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி
இந்த ஆண்டு றுதியில் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா போட்டியிட உள்ளார்.
ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் தேர்தல் தேதி அறிவிப்பு
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 28-ந் தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை போலீசார் அழைப்பு
சென்னை பெருநகர போலீஸ்துறையின் கடலோர காவல் படையின் ஊர்க்காவல் படைக்கு மீனவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், எவ்வித குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை போலீஸ்துறை எல்லைக்குள், மெரீனா கடற்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. சுற்றளளவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மீன்வளத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.