இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பிரனாய் தோல்வி

2வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரான்ஸ் வீரர் பேபோவை எதிர்கொண்டார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரான்ஸ் வீரர் பேபோவை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 14-21, 21-17,17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-18, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீரரிடம் தோல்வியடைந்தார்.
Related Tags :
Next Story






