புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 2-வது தோல்வி


புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 2-வது தோல்வி
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்திய அணி தரப்பில் வைஷ்னவி பால்கே மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

லண்டன்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருந்தது.

இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 கோல்கள் போட்டது. இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வியை தழுவியது. இந்தியா தரப்பில் வைஷ்னவி பால்கே மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் எமி லாட்டன் மற்றும் லெக்சி தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

1 More update

Next Story