புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணியிடம் இந்தியா மீண்டும் தோல்வி


புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணியிடம் இந்தியா மீண்டும் தோல்வி
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் அர்ஜென்டினாவை சந்தித்தது.

ஆம்ஸ்டர்டாம்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ ஆக்கி போட்டியின் ஐரோப்பிய சுற்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் அர்ஜென்டினாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-வது நிமிடத்தில் கோல் போட்டது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜூக்ராஜ் சிங் இந்த கோலை அடித்தார். 9-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி பதில் கோல் திருப்பி சமநிலை ஏற்படுத்தியது. அந்த அணியின் தாமஸ் டோமின் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்த கோலை அடித்தார்.

41-வது நிமிடத்தில் அவர் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா, அதனை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. முடிவில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே அர்ஜென்டினாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும், நெதர்லாந்துக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் தோற்று இருந்தது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவை ஆன்ட்வெர்ப்பில் சந்திக்கிறது.

1 More update

Next Story