யு19 உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்று: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார்
ஹசாரே,
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப்2-ல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்றில் நியூசிலாந்து, வங்காளதேசத்தை வீழ்த்தி இருப்பதால் அந்த வெற்றிக்குரிய புள்ளி சூப்பர்6 சுற்றில் கணக்கில் கொள்ளப்படும். அவற்றுடன் இனி மோத வேண்டியதில்லை.
போட்டி விதிப்படி சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி, இன்னொரு பிரிவில் இருந்து வந்த 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதன்படி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர்6 சுற்றில் இன்று போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயை புலவாயோவில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.






