லாரி மீது பள்ளி வேன் மோதி கோர விபத்து; மாணவ-மாணவியர் 13 பேர் பலி

விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 25க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயணித்தனர்.
இந்நிலையில், வெண்டர்பிஜில்பார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பள்ளி வேன் மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ-மாணவியர் 11 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






