இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Nov 2025 12:31 PM IST
தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்
கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.
- 22 Nov 2025 12:09 PM IST
இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்...சாதனை படைத்த நட்சத்திர நடிகை - யார் தெரியுமா?
தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
- 22 Nov 2025 12:07 PM IST
திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவு.. அன்புமணி கண்டனம்
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 22 Nov 2025 11:54 AM IST
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
வரும் 25-ம் தேதி கோவையில் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- 22 Nov 2025 11:28 AM IST
தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மாவட்டங்களில் மழை நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் இயல்பான நீர்வரத்தை விட பல மடங்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு காணப்படுவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குளிக்க அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 22 Nov 2025 11:21 AM IST
நாம் தமிழர் கட்சியினரின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நெல்லை மாவட்டம் பணகுடியில் நாம் தமிழர் கட்சியின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
நாதக நிர்வாகிகள் சிலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளநிலையில், நெல்லையில் சீமான் தங்கியுள்ள திருமண மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 22 Nov 2025 11:18 AM IST
முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 4500 ஆக இன்று விற்பனை ஆகிறது.
தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும், வரத்து குறைந்திருப்பதும் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன. மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 22 Nov 2025 11:10 AM IST
சட்டசபை தேர்தல்: திமுகவுடன் பேச்சு வார்த்தை - குழு அமைத்த காங்கிரஸ்
அரசல் புரசலாக வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- 22 Nov 2025 11:09 AM IST
மேகதாது அணை விவகாரம்: விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
உரிமைகளை தாரை வார்க்க தி.மு.க. அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
- 22 Nov 2025 11:08 AM IST
மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
















