அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளின் திமில் பிடித்து அடக்கும் காளையர்கள்


தினத்தந்தி 15 Jan 2026 6:30 AM IST (Updated: 15 Jan 2026 8:56 AM IST)
t-max-icont-min-icon

முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மதுரை,

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.

பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு அவனியாபுரத்தில் விளையாட தகுதி வாய்ந்த 1100 காளைகளும், சுமார் 600 வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. சீரும் காளைகளின் திமிலை காளையர்கள் அடக்கி வருகின்றனர். முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.



1 More update

Next Story