மத்தியபிரதேசம்: கார் விபத்தில் முன்னாள் மந்திரியின் மகள் உள்பட 3 பேர் பலி


மத்தியபிரதேசம்: கார் விபத்தில் முன்னாள் மந்திரியின் மகள் உள்பட 3 பேர் பலி
x

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபால்,

மத்தியபிரதேசம் ராஜ்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். இவர் மத்தியபிரதேசத்தின் உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் மந்திரி பாலா பச்சனுக்கு பிரேர்னா பச்சன் என்ற மகள் இருந்தார். இந்நிலையில், பிரேர்னா பச்சன் நேற்று இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி , கார் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பிரேர்னா பச்சன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இளம்பெண் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story