சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தொடங்கியது


சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
x

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடந்தது.

2-ம் நாளான நாளை இரவு அய்யா மயில் நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் கடுவாய் வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் சப்பர வாகன பவனி வருதல், 6-ம் நாள் சற்ப வாகன பவனி, 7-ம் நாள் கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

8-ம் நாள் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் நாள் இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி நடக்கிறது

விழாவின் நிறைவு நாளான ஜூன் மாதம் 2-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

1 More update

Next Story