இறைவனை வணங்கும் வழிமுறை

குழல் ஊதும் கிருஷ்ணரின் உருவத்தையோ, அல்லது படங்களையோ வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
* இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது, கண்களை மூடி வழிபடுதல் கூடாது. கண்களை திறந்தபடி அந்த தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்யவேண்டும்.
* ஆலயத்தில் இறைவனை தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும் செய்யக்கூடாத ஒரு விஷயம், உடனடியாக குளிப்பது. சிறிது நேரம் கழித்து முகம், கை, கால்களை கழுவலாம்.
* கோவிலில் இருந்து நேரடியாக ஓட்டல்கள் அல்லது ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. நேராக வீட்டுக்கு வரவேண்டும்.
* வீட்டின் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் படங்களை கிழக்கு நோக்கி இருப்பது போல் வைப்பது சிறப்பானது.
* குழல் ஊதும் கிருஷ்ணரின் உருவத்தையோ, அல்லது படங்களையோ வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
* வீட்டின் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டும்போது, அந்த தீபத்தில் உள்ள கற்பூரம் எரிந்தபின் தானாக அணைய விடுவது நல்லது. தீபம் எரிந்து கொண்டிருக்கும் போதே அணைக்கக்கூடாது.
* துர்க்கை அம்மனுக்கு மட்டுமே எலுமிச்சையில் தீபம் ஏற்றுவது சிறப்பானது.
* தங்களின் தாய் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள், சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையில் சிவ பெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது பலன் கொடுக்கும்.
* சுவாமிக்கு ஆரத்தி கரைக்கும்போது அதில் சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது.