உடன்குடி: சீர்காட்சி தர்மபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்- நிகழ்ச்சிகள் முழு விவரம்


உடன்குடி: சீர்காட்சி தர்மபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்- நிகழ்ச்சிகள் முழு விவரம்
x

ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு திருக்கல்யாண விருந்தைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

தூத்துக்குடி

உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி அய்யா நாராயண சுவாமி தர்மபதியில் ஆடி மாதத்தில் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா இன்று (1.8.2025) தொடங்கியது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடையைத் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு திருநாமக் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் உகப்படிப்பு, அய்யா சப்பரத்தில் பதிவலம் வருதல் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான அன்புக் கொடி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று காலை 7 மணிக்கு பக்தர்களுக்கு சிற்றுண்டி தர்மம், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மதியம் 1.30 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும்.

நிகழ்ச்சிகள்

நாளை முதல் 6-ம் தேதி வரை தினசரி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசித்தல், இரவு 9 மணிக்கு சிற்றுண்டி தர்மம் நடக்கிறது.

7ம் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, ஊர் மக்களிடம் தர்மம் எடுக்க செல்லுதல், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப் படிப்பு, திரு ஏடு வாசித்தல், இரவு 9 மணிக்கு சிற்றுண்டி தர்மம் நடைபெறும்.

8ம் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, பகல் 1.30 மணிக்கு உம்பான் அன்னதர்மம், மாலை 5 மணிக்கு அன்பு கொடி மக்கள் திருக்கல்யாண சுருள் மற்றும் இனிப்பு பலகாரங்களை பதிக்கு கொண்டு வருதல், இரவு 7 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம், இரவு 9 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, இரவு 9.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வருதல், இரவு 12 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெறும்.

9ம் தேதி காலை 6 மணிக்கு மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, காலை, மதியம், இரவு அன்ன தர்மம், மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திரு ஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு அய்யா புஷ்ப வாகனத்தில் பதி பவனியும், சந்தன குடம், மாவிளக்கு பெட்டி எடுத்து வரும்நிகழ்ச்சியும் நடைபெறும்.

10ம் தேதி காலை 6 மணி பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப் படிப்பு, காலை, மதியம், இரவு அன்னதானம், மாலை 6 மணிக்கு அன்பு கொடி மக்கள் பதியில் பால் வைத்தல், இரவு 10 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு பட்டாபிஷேத் திரு ஏடு வாசிப்பு, இரவு 12 மணிக்கு இந்திர வாகனத்தில் நகர் வலம் வருதல், வரும் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருநாமக் கொடி அமர்தல், பள்ளியுணர்தல், இனிமம் வழங்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

1 More update

Next Story