மருந்துவாழ்மலை உச்சியில் 5 நாட்களாக எரிந்த "மகா தீபம்" நிறைவு பெற்றது


மருந்துவாழ்மலை உச்சியில் 5 நாட்களாக எரிந்த மகா தீபம் நிறைவு பெற்றது
x

இன்று அதிகாலை விசேஷ பூஜைகள் நடத்தி கார்த்திகை மகா தீபம் நிறைவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்பட்டது.

மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பபட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தெளிவாக தெரிந்தது. 5 நாட்கள் இரவு-பகலாக தொடர்ந்து எரிந்துகொண்டிருந்த இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி அங்கு இன்று அதிகாலை 6.30 மணிக்கு விசேஷ பூஜைகள் நடத்தி கார்த்திகை மகா தீபம் நிறைவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்க தலைவரும் உச்சி ஆஞ்சநேயர் திருக்கோவில் நிர்வாகியுமான மருந்துவாழ் மலை அடிகளார் ஜெகன் சுவாமிகள் பூஜை செய்தார். மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்க நிர்வாகி சேது ஜோதிலிங்கம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து உச்சி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் மலை உச்சிக்கு ஏறி சென்று தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைக்கான இதற்கான ஏற்பாடுகளை மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் மருந்துவாழ் மலை அடிகளார் ஜெகன் சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story