பாவங்களை போக்கும் பரணி தீபம்


பாவங்களை போக்கும் பரணி தீபம்
x

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று மாலையில் இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ விளக்கேற்றி வழிபட வேண்டும்‌.

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணி அளவில்‌ அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மஹா தீபம் ஏற்றப்படும்‌.

பரணி தீபம்

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரத்தன்று மாலையில் இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ விளக்கேற்றி வழிபட வேண்டும்‌.

அன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு.

மண்‌ விளக்குகளை வீட்டின்‌ வாசல்‌ படிகளில், படிக்கு மூன்று வீதம்‌ ஏற்றி வைப்பது மரபு. வீட்டில்‌ நல்லெண்ணெயிலும்‌, முருகனுக்கு இலுப்பெண்ணெயிலும்‌ விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌. இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌. மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌. நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌. ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.

1 More update

Next Story