சந்திர கிரகணம்; திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி


சந்திர கிரகணம்; திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி
x

செப்டம்பர் 8-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்செந்தூர்,

வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும்.

இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து, பகல் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 5 மணிக்கு பள்ளியறை மற்றும் நடை திருக்காபிடுதலும் நடைபெறும்..

மேலும் அன்றைய தினம் அனைத்து பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்..

அதன்பின் மறுநாள் செப்டம்பர் 8-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story