’பிஎம்டபிள்யூ’-க்குப் பிறகு...இந்த ஹீரோவுக்கு ஜோடியாகும் ஆஷிகா ரங்கநாத்?

ஆஷிகா ரங்கநாத்தின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கி வரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தொடர்ச்சியாக தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) படத்தில் நடித்துள்ளார். கடந்த 13-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆஷிகா ரங்கநாத்தின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவரின் அடுத்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஷர்வானந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






