விடுமுறை தினம்: திருச்செந்தூரில் நீண்ட நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
x
Daily Thanthi 2026-01-25 07:34:35.0
t-max-icont-min-icon

விடுமுறை தினம்: திருச்செந்தூரில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் சுமார் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story