தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
x
Daily Thanthi 2026-01-16 05:54:19.0
t-max-icont-min-icon

தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கம் 


இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி -திருச்சி. தாம்பரம் சந்திரகாச்சி, நாகர்கோவில் ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அம்ரித் பாரத் ரெயில்கள் புறப்படும் நேரத்தை ரெயில்வே வெளியிட்டுள்ளது. 

1 More update

Next Story