இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோத உள்ளார்.
ரோம்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான கோகோ காப் (அமெரிக்கா) - கின்வென் ஜெங் (சீனா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காப்பும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கின்வென் ஜெங்கும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில் இந்த செட்டில் 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் கின்வென் ஜெங்கை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோத உள்ளார்.