மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி


மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி
x

image courtesy:twitter/@ProKabaddi

இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் உகாண்டாவுடன் இன்று மோதியது.

டாக்கா,

டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து, வங்காளதேசம் மற்றும் ஜெர்மணி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்டிருந்தது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

இதனையடுத்து இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 51-16 என்ற புள்ளி கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

1 More update

Next Story