புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி

2-வது புரோ கபடி லீக் கடந்த 28ம் தேதி தொடங்கியது .
விசாகப்பட்டினம்,
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது . முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.
இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 37-28 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை பந்தாடியது. இன்று பெங்கால் வாரியர்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story