ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: சென்னையில் தொடங்கியது

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் (35 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கேற்றுள்ளனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்த போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா மற்றும் தடகள சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





