இந்தியாவுக்கு வரும் மெஸ்சி... தோனி, கோலி உடன் கிரிக்கெட் விளையாடுகிறாரா..?

மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு மெஸ்சி வர உள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி, வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு மெஸ்சி வர உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் விராட் கோலி, மகேந்திரசிங் தோனி போன்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களுடன் மெஸ்சி கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு வரு மெஸ்சி மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story