பாத்ரூமில் அழுத விராட் கோலி.. உண்மையை உடைத்த சாஹல்... என்ன நடந்தது..?


பாத்ரூமில் அழுத விராட் கோலி.. உண்மையை உடைத்த சாஹல்... என்ன நடந்தது..?
x
தினத்தந்தி 2 Aug 2025 9:09 AM IST (Updated: 2 Aug 2025 9:12 AM IST)
t-max-icont-min-icon

2019 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

மும்பை,

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நட்சத்திர வீரர் விராட் கோலி பாத்ரூமில் வைத்து அழுத சம்பவம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். 2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை தாங்க முடியாமல் அப்போதைய கேப்டன் விராட் கோலி பாத்ரூமில் அழுததாக யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சாஹல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 63 ரன்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி களத்தில் உருவாக்கும் ஆற்றலை யாருடனும் ஒப்பிடவே முடியாது. ஒவ்வொரு நாளும் அதே எனர்ஜியுடன் இருப்பார். ஒருநாளும் அந்த எனர்ஜி குறைந்து பார்த்தே இல்லை. ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரின் அடைந்த தோல்விக்கு பின் பாத்ரூமில் விராட் கோலி அழுவதைப் பார்த்தேன். அந்தப் போட்டியில் கடைசி பேட்ஸ்மேன் நான்தான். நான் அவரைக் கடந்த சென்ற போது, விராட் கோலியின் கண்களில் கண்ணீர் இருந்ததை பார்த்தேன். அந்தப் போட்டிக்கு பின் ஒவ்வொரு இந்திய வீரரும் கண்ணீருடன் இருந்தார்கள்.

அதுதான் தோனியின் கடைசி போட்டியும் கூட.அந்த போட்டியை நினைக்கும் போதெல்லாம் சிறப்பாக பவுலிங் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசி, 10-15 குறைவான ரன்களை கொடுத்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் களத்தில் அப்படி நினைப்பதே கடினமான விஷயம். உங்களுக்கு சிந்திக்க நேரம் கிடைக்காது" என்று கூறினார்.

1 More update

Next Story