டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்


டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
x

மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

சேலம்,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனிடையே மழை காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து 7.40 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் களமிறங்கினர்.

இதில் ராம் அரவிந்த் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

நெல்லை அணியில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story