டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனிடையே மழை காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து 7.40 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது மதுரை பாந்தர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.