டெஸ்ட் தொடர்: இந்திய அணியை கிண்டலடிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்

image courtesy:PTI
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களம் இறங்குகிறது.
சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஓய்வுக்கு பிறகு சுப்மல் கில் தலைமையில் இந்திய இளம் படை டெஸ்டில் முதல்முறையாக கால் பதிக்கிறது. சீனியர்கள் இல்லாத குறையை சமாளித்து இந்திய அணி எப்படி சாதிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே முன்னணி வீரர்கள் இல்லாததால் இந்திய அணி இம்முறை தோல்வியை தழுவ அதிக வாய்ப்புள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கி வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியை இங்கிலாந்து முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகன் மற்றும் ஸ்வான் கிண்டலடிக்கும் வகையில் பேசியுள்ளனர். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி குறித்து மைக்கேல் வாகன் பேசுகையில், "இந்திய அணி மீண்டும் தோல்வியடைய வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான ஸ்வான், "இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்கான சிறந்த பயிற்சியாகும்" என்று கூறியுள்ளார்.