இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கில் எந்த வரிசையில் களமிறங்குவார் ?


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கில் எந்த வரிசையில் களமிறங்குவார் ?
x

4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை லீட்சில் தொடங்குகிறது.டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்குப்பின் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. சுப்மன் கில்லின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் , இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கில் 4வது வரிசையில் களமிறங்குவார் என அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது

'இந்திய அணியில் 3-வது வரிசையில் ஆடுவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 4-வது மற்றும் 5-வது வரிசையில் ஆடுவது யார்? என்பதை முடிவு செய்துவிட்டோம். 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில்லும், 5-வது வரிசையில் நானும் களம் இறங்க இருக்கிறோம்' என்றார்.

1 More update

Next Story