நெல்லை ராயல் கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்


நெல்லை ராயல் கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
x

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.

சேலம்,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், சேலத்தில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story