அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு

image courtesy:PTI
இவர் இந்திய ஏ அணிக்காக விளையாடியுள்ளார்.
மும்பை,
இந்திய வீரரான பிரியங்க் பஞ்சால் (வயது 35) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகாவிட்டாலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் தொடர்களில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். குஜராத் தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்ற (2016-17) சீசனில், பஞ்சால் 1300 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி உள்ளார்.
இவர் முதல் தர போட்டிகளில் 29 சதங்களும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 8 சதங்களும் அடித்துள்ளார்.
உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது 35-வது வயதில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இருக்கிறார்.