பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு


பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2025 10:03 PM IST (Updated: 8 Jun 2025 6:56 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு ,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ,இந்த சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார் .

1 More update

Next Story