4வது டி20; ஸ்மிருதி , ஷபாலி அதிரடி..இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீராங்கனைளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர். பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தநா 80 ரன்களும், ஷபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர்.பின்னர் ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.






