டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் - ஜெலன்ஸ்கி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது.
கீவ்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம். உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திக்க உள்ளேன். புத்தாண்டுக்குமுன் அதிக முடிவுகள் எடுக்கப்பட உள்ளன’ என தெரிவித்துள்ளார்.






