நைஜீரியா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு

மசூதியில் நடந்த தாக்குதலில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





