தென் ஆப்பிரிக்கா: ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க முயன்ற 4 பேர் கைது


தென் ஆப்பிரிக்கா: ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க முயன்ற 4 பேர் கைது
x

தென் ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகளில் இருந்தும் ரஷிய ராணுவத்தில் வீரர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 3½ ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனை எதிர்த்து போரிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்களை ரஷியா ஈடுபடுத்தியது. இது தவிர தென் ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகளில் இருந்தும் ரஷிய ராணுவத்தில் வீரர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஷியாவுக்கு ஆதரவாக போரிட சென்ற 17 தென் ஆப்பிரிக்கர்கள் உக்ரைனில் சிக்கி கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகன் ஜுமா-சம்புட்லா எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தற்போது ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க உதவிய குற்றச்சாட்டில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story