இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது
ஜெருசலேம்,
ஈரான் - இஸ்ரேல் இடையே 7-வது நாளாக மோதல் நீடித்து வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணைகளை கொண்டு தாக்கி வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி குண்டு மழை பொழிந்து வருவதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. சமாதான பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுத்துள்ளது. இதனால், இந்த மோதல் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனையின் பிரதான கட்டிடம் மீது ஏவுகணையை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து தீப்பிழம்புகளும் கரும்புகையும் வெளியேறும் காட்சிகள் இஸ்ரேல் ஊடகங்களில் வெளியனது. இதுபோக, மத்திய இஸ்ரேலிலும் உயரமான கட்டிடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் உள்ள ஆராக் கன நீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.