இங்கிலாந்து: கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம்

தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தியது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் நோக்கம் என்பது அதனை மாற்றுவதுதான்".
"The philosophers have only interpreted the world, in various ways. The point, however, is to change it."
உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story