பிரேசிலை தாக்கிய சூறாவளி - 5 பேர் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.
பிரேசிலா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணத்தை நேற்று முன் தினம் இரவு சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டிடங்களில் மேற்கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேசிலை தாக்கிய சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 432 பேர் காயமடைந்தனர். மீட்புப்பணிகள் போலீசார், தீயணைப்புத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





