6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 7 Nov 2025 7:59 PM IST (Updated: 7 Nov 2025 8:04 PM IST)
t-max-icont-min-icon

லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story