28 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு


28 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர் கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னிவகுமாரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தேத்துக்குடி. திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம்.செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், கரூர், மதுரை, நாமக்கல், ராமநாதபுரம். சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story