மிரட்டும் கனமழை: சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?


மிரட்டும் கனமழை: சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
x

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

  • பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
  • நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • 22.10.2025 முதல் 30.10.2025 வரை மொத்தம் 5,98,200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 30.11.2025 அன்று 32,500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இன்று (01.12.2025) 83,600 நபர்களுக்கு மதிய உணவும், 1,54,000 நபர்களுக்கு இரவு உணவு என மொத்தம் 2,37,600 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
  • பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 30.11.2025 அன்று வரை 2800 நிலையான மற்றும் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,16,264 பயனடைந்துள்ளனர். இன்று (01.12.2025) 63 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,918 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
  • தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 107 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் 36 வைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 300 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 50 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
  • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
  • 2 ஆம்பிபியன். 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
  • பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2 கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.
  • 29.11.2025 அன்று முதல் 01.12.2025 இன்று வரைமழையின் காரணமாக விழுந்த 20 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.
  • மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் பணிகள் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • புயல் மற்றும் மழையின்போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 லட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக் குடிநீர் வாரியம்:-

299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 181 ஜெட்ராடிங் வாகனங்கள், 45 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள். 3 கழிவுநீர் ஊர்திகள். 3 கழிவுநீர் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 100 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 704 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக தயார்நிலையில் உள்ளது.

* 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 111 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story