தொல்லை கொடுத்த கொழுந்தன்... பெற்றோருடன் சேர்ந்து பெண் செய்த கொடூர செயல்


தொல்லை கொடுத்த கொழுந்தன்... பெற்றோருடன் சேர்ந்து பெண் செய்த கொடூர செயல்
x

சந்தேகத்தின் பேரில் பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே சென்னமநாயக்கன்பட்டி, பாறையூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15-ந் தேதி கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் திண்டுக்கல் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜோதிமணி (வயது 35) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பூத்தாம்பட்டியை சேர்ந்த கோமதி (33), அவரது தந்தையான கோனூரை சேர்ந்த நடராஜன் (48), தாய் நீலா (45) என்பதும், இவர்கள் ஜோதிமணியை கொலை செய்த திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.

அதில், கொலை செய்யப்பட்ட ஜோதிமணியின் அண்ணன் முருகன் (48). இவருடைய மனைவி தான் பிடிபட்ட கோமதி. முருகன், கோவையில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கோமதி தனது 3 குழந்தைகளுடன் பூத்தாம்பட்டியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனியாக இருந்த கோமதிக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஜோதிமணி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோமதி தனது பெற்றோரான நடராஜன், நீலா மற்றும் தங்கை கணவர் ஸ்டாலின் (30) ஆகியோருடன் சேர்ந்து ஜோதிமணிக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து அவரது கை, கால்களை கட்டி தூக்கிச்சென்று கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஜோதிமணியை திட்டமிட்டு கொலை செய்ததாக கோமதி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story