கோவை-ஜெய்ப்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் வழியாக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06181) அடு்த்த மாதம் (டிசம்பர்) 18 மற்றும் 25-ந் தேதிகளில் (வியாழக்கிழமை) கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கடப்பா வழியாக சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06182) அடுத்த மாதம் 21 மற்றும் 28-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமைகளில் அதிகாலை 3.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து அதிகாலை 3.53 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 8.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






