கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்; சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த 25ம் தேதி கொண்டாடப்பட்டது.
சென்னை
கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த 25ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை தினங்களையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை தினங்கள் நிறைவடைந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
உளுந்தூபேட்டை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் நெரிசலை குறைக்க கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story






