மாதாந்திர பராமரிப்பு பணி: திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்தடை

திருமழிசை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருவள்ளூர்
திருமழிசை கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை கோட்டத்தைச் சேர்ந்த திருமழிசை துணைமின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை மறுநாள் (21.6.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார்கோயில், பிராயம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்ேபடு, பாரிவாக்கம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story