அடிக்கடி உல்லாசமாக இருக்க கூறி பெண்ணை வைத்து கணவருக்கு பாலியல் தொல்லை: மீட்டு தர கோரி பெண் மனு

சவுதி அரேபியாவில் விலங்குகளிடமும், பாலியல் தொல்லை செய்யச்சொல்லி என் கணவரை அடித்துள்ளனர் என்று மனைவி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் பெரியதும்பூர் பகுதியை சேர்ந்த உதயஜோதி என்பவர் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கவாஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்து உள்ளனர். அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண்ணை வைத்து கணவருக்கு அடிக்கடி உல்லாசமாக இருக்க கூறியும் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர். மேலும் விலங்குகளிடமும், பாலியல் தொல்லை செய்யச்சொல்லி அடித்துள்ளனர். இந்த கொடுமைகள் குறித்து என்னிடம் போனில் கூறி கதறி அழுதார். இருக்கும் இடத்தை கூட எனது கணவரால் கூறமுடியவில்லை.
எனவே சவுதி அரேபியாவில் பலவிதங்களில் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வரும் எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.