சென்னை பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்குச் சென்ற போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை,
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த யாமினி. இவர் தன்னுடைய மகளான 10 வயதுடைய சிறுமி சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்
அப்போது யாமினி சடனே பிரேக் பிடித்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து சிறுமி தவறி கிழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார். இதனைகண்டு சுற்றி இருந்தவர்களும் கண் கலங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.