ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு வைராபாளையம் நாட்ராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 20). கூலித்தொழிலாளி. இவருக்கு ஈரோடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் சந்தோஷ், சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story