காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x
தினத்தந்தி 2 Aug 2025 7:26 AM IST (Updated: 2 Aug 2025 7:56 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story