மக்களின் வேதனையை உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி


மக்களின் வேதனையை உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம் 

மக்களின் கண்ணீரை, வேதனையை துளி கூட உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர!மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார்.

முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய்தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா? ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர். ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த கள்ளச்சாராய தி.மு.க. மாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story